என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் அருகே வீடு புகுந்து 2 கிலோ வெள்ளி கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை
- நேற்றும் வழக்கம் போல் மாலை வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார்.
- ட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே வெள்ளாடிச்சிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்.இவரது மனைவி ராமச்சந்திராள் (வயது 66).
இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஸ்ரீதரன் இறந்துவிட்டார். 2மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள். மகளுக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் பக்கத்தில் உள்ள தெருவில் வசித்து வந்தார். மருமகனும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
இதனால் ராமச்சந்திராள் தினமும் தனது மகள் வீட்டிற்கு தூங்க செல்வது வழக்கம். மாலை நேரத்தில் மட்டும் தனது வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு செல்வார். நேற்றும் வழக்கம் போல் மாலை வீட்டிற்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டு கதவை பூட்டிவிட்டு சென்றார்.
இன்று காலை வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப் பட்டு இருப்பதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ராமச்சந்தி ராளுக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார்.மேலும் கோட்டார் போலீசுக்கும் தகவல் தெரி விக்கப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் விஜயன் மற்றும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்குகளை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். ஒரு குத்துவிளக்கு ஒரு கிலோ எடை கொண்டதாகும். 2 கிலோ எடை கொண்ட வெள்ளி குத்துவிளக்குகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் கொண்டுவரப்பட்டது. வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு ஓட்டம் பிடித்த நாய் வீட்டை சுற்றி சுற்றி வந்தது.
வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.கேமிரா கடந்த 7-ந் தேதி வரை மட்டுமே செயல்பட்டு உள்ளது. அதன் பிறகு சி.சி.டி.வி. கேமராக்கள் செயல் படாததால் எந்த காட்சிகளும் பதிவாகவில்லை.
ராமச்சந்திராள் மகள் வீட்டில் தினமும் தங்குவதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்