என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தக்கலையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கொண்டு சென்ற 3 பேர் கைது
- தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தலைமையில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
- ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி ;
தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் தலைமையில் கோழிப் போர்விளை பகுதி யில் நேற்று மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அப்போது 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசி னர்.
இதையடுத்து போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கோடியூரை சேர்ந்த மணி கண்டன், முகமாற்றூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 22), பள்ளியாடி அருவிதோட்டம் பகுதியை சேர்ந்த வினித் (22) என தெரியவந்தது.
மேலும் எங்கிருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது? எனவும் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்