என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெங்களூரு ரெயிலில் 36 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்
- போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
- கூரியர் மூலமாக கஞ்சா பார்சலில் அனுப்பப்பட்டு விற்பனை
நாகர்கோவில்:
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குமரி மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த சில நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்வதாக 250-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் பலரது வங்கி கணக்குகளை போலீசார் முடக்கி உள்ள னர். தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு வதன் காரணமாக வெளியூர்களி லிருந்து கஞ்சா மற்றும் குட்கா புகையிலை கொண்டு வருவது கட்டுப்படுத்தப்ப ட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது கூரியர் மூலமாக கஞ்சா பார்சலில் அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் கூரியர் நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலமாக கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்கவும் ரெயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் கேத்தரின் சுஜாதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனியப்பன், குமார்ராஜ் ஆகியோர் பெங்களூருரில் இருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை மேற்கொ ண்டனர்.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டபோது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் சந்தேகப்ப டும்படியாக 4 பேக்குகள் இருந்தது. போலீசார் அந்த பேக்குகளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பேக்கில் இருந்த 36 கிலோ குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். புகையிலையை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்