search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தக்கலை அருகே கஞ்சாவுடன் சுற்றிய கல்லூரி மாணவர் உள்பட 4  பேர்  கைது
    X

    தக்கலை அருகே கஞ்சாவுடன் சுற்றிய கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

    • போலீசார் தக்கலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
    • 70 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

    கன்னியாகுமரி:

    தக்கலை டி.எஸ்பி. கணேசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் உள்பட போலீசார் நேற்று மாலை தக்கலை பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது 4 பேர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி பிடித்து சோதனை செய்த போது அவர்களிடம் 70 கிராம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை செய்தபோது கல்லூரி மாணவர் உள்பட திருவிதாங்கோட்டை சேர்ந்த ஷிபான்( வயது22) வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த முகம்மது ரியாஸ் (22) திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த இம்ரான் (33) மற்றும் பயாஸ் (21) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து 4 பேைரயும் கைது செய்தனர்.

    Next Story
    ×