search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கருங்கல் அருகே மாடிப்படியில் தவறி விழுந்து தொழிலாளி பலி
    X

    கருங்கல் அருகே மாடிப்படியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

    • திருமணம் மற்றும் விசேஷ விழாக்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.
    • பாத்ரூம் சென்றவர் பாத்ரூமிலும் வழுக்கி விழுந்துள்ளார். அப்போதும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் ஆப்பிகோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 35). இவர் திருமணம் மற்றும் விசேஷ விழாக்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

    நேற்று மது போதையில் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு வந்தவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வரும் போது கால் தவறி விழுந்து உள்ளார். இதனை கண்ட அவரது மனைவி சைலஜா அவரை தூக்கி விட்டுள்ளார். இதில் கிருஷ்ணகுமாருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

    அதன் பின் பாத்ரூம் சென்றவர் பாத்ரூமிலும் வழுக்கி விழுந்துள்ளார். அப்போதும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது மனைவி பக்கத்து வீட்டாருடன் கிருஷ்ணகுமாரை அருகில் உள்ள தனியார் கிளினிக் கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த டாக்டர் வேறு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல கூறியுள்ளார். அதன்பின் அவரை மார்த்தாண்டம் தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். தொடர்ந்து குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோ தித்த மருத்துவர் கிருஷ்ண குமார் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×