search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற டாரஸ் லாரி
    X

    களியக்காவிளையில் நடுரோட்டில் பழுதாகி நின்ற டாரஸ் லாரி

    • லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி
    • சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்க ளில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் தினசரி கனி மவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவ திக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வாகனத்தின் உரிமை யாளர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கனிமவளம் ஏற்றிக்கொண்டு கேரளாவை நோக்கி டாரஸ் லாரி ஒன்று வந்துக்கொண்டிருந்தது. அந்த லாரி களியக்காவிளை பகுதியில் வந்தபோது சாலையின் நடுவில் பழுதாகி நின்றது. இதனால் அங்கு சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாற்று பாதையில் வாகனங்களை அனுப்பி போக்குவரத்தை சீர் செய்தனர். களியக்காவிளை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×