search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திற்பரப்பை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    திற்பரப்பை சேர்ந்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    • கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

    நாகர்கோவில் :

    திருவட்டார் தாலுகா திற்பரப்பு நக்கீரண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 36). இவர் மீது குலசேகரம் போலீஸ் நிலையத்தில் கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஜெகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

    Next Story
    ×