search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியில் ஈடுபட்ட தொழிலாளி பாம்பு கடித்து சாவு
    X

    தூய்மை பணியில் ஈடுபட்ட தொழிலாளி பாம்பு கடித்து சாவு

    • உடல் நலம் பாதித்த மனைவிக்கு பதிலாக போனவர்
    • நாகர்கோவிலில் இன்று பரிதாபம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே உள்ள கீழகோணம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 49). இவரது மனைவி முத்துசெல்வம். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்து செல்வம் நாகர்கோவில் மாநக ராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    முத்து செல்வத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது பணியை கணவர் பரமசிவம் மேற்கொண்டார். இன்று காலை பரமசிவம் கோணம் கம்பி பாலம் பகுதியில் கால்வாயில் முட்புதர்களை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் கிடந்த விஷ பாம்பு பரமசிவத்தை கடித்தது.

    இதையடுத்து அவர் கூச்சலிட்டார். உடனே பணியில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பரமசிவத்தை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். பரமசிவத்தின் உடல் பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தூய்மை பணியின் போது ஒருவர் பாம்பு கடித்து பலியான சம்பவம் மாநகராட்சி ஊழியர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×