என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
- தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுஜிதா தனது அறையில் சென்று கதவை சாத்திவிட்டு படுத்துள்ளார்
- உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே தளச்சான்விளை பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி சுஜிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தளச்சான் விளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பிரகாசின் சில தேவைகளுக்காக சுஜிதாவின் நகையை அடகு வைத்ததாகவும் மேலும் இவர்கள் தங்கி இருக்கும் வீட்டை அடகு வைத்து லோன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவி இடையே நகை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த சுஜிதா தனது அறையில் சென்று கதவை சாத்திவிட்டு படுத்துள்ளார். பிரகாசும் குழந்தைகளும் பக்கத்து அறையில் தூங்கியுள்ளனர்.
காலையில் பிரகாஷ் எழுந்து சுஜிதாவின் அறை கதவை தட்டியபோது அறையில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பிரகாஷ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறை கதவை உடைத்து பார்த்த போது சுஜிதா மின் விசிறில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஜிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பலியான சுஜிதாவின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சுஜிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்