search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே சிறுமியிடம் நகை பறித்த வாலிபர் கைது
    X

    இரணியல் அருகே சிறுமியிடம் நகை பறித்த வாலிபர் கைது

    • சிறுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.
    • சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அவர் தப்பி சென்றதாக புகார்

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளையை அடுத்த சடையமங்கலம் இறுங்கன் விளாகத்து வீடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43), தொழிலாளி.

    இவருடைய மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் வாங்க நடந்து சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர் வழி கேட்பது போல் நடித்து சிறுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளார்.

    மேலும் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு அவர் தப்பி சென்றதாக இரணியல் போலீசில் மணிகண்டன் புகார் செய்தார். அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்போஸ்கோ தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் குன்னங்காடு பகுதியை சேர்ந்த காய்கறி கடையில் வேலை செய்யும் அனீஸ் (25) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்தான் சிறுமியிடம் நகை பறித்தவர் என தெரியவந்தது.

    இதனைத்தொடர்ந்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி (பொறுப்பு) விசாரணை நடத்தி அனீசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    Next Story
    ×