search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிவீஸ்வரத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    வடிவீஸ்வரத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராகின்ற வகையில் பூத் கமிட்டி அமைப்பது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு பகுதி 25-வது வார்டு அ.தி.மு.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் மாநகர 25-வது வார்டு வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான அக்ஷயா கண்ணன் ஏற்பாட்டில் வடிவீஸ்வரத்தில் நடைபெற்றது. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு நிர்வாகிகள் தயாராகின்ற வகையில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான கையேடுகளை வழங்கி, சீரிய முறையிலும், சிறப்பாக நிர்வாகிகள் செயல்பட ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணை செயலாளர் சாந்தினி பகவதியப்பன், நாகர்கோவில் மாநகர பகுதி செயலாளர்கள் ஜெயகோபால், ஜெபின்விசு, முருகேஸ்வரன், நாகர்கோவில் மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீலிஜா, கோபாலசுப்பிரமணியம் மற்றும் நிர்வாகி திவ்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×