search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
    X

    இரணியல் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

    • உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி நேற்று மாலை விஷம் அருந்தி நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் கரையான்விளை பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவரது பெரியம்மா வள்ளியம்மாள் (வயது 76). இவர் செல்வனின் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வள்ளியம்மாள் நேற்று மாலை விஷம் அருந்தி நுரை தள்ளியபடி மயங்கி கிடந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்வன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×