என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதுக்கடை அருகே கடையில் புகுந்து வியாபாரி மீது தாக்குதல் - மனைவி உட்பட 5 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்23 July 2022 8:08 AM GMT
- கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கணவரை பிரிந்து தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்
- போலீசார் விசாரணை நடத்தி புனிதா உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
கன்னியாகுமரி :
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி தடிச்சமாவுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 50). இவர் முஞ்சிறை பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புனிதா இவர்களுக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கணவரை பிரிந்து தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துதாஸ் கடையில் இருக்கும்போது, வேங்கோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜசேகர் உட்பட மேலும் மூன்று பேர் சேர்ந்து பேசி, தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கிறிஸ்துதாஸ் தனது செல்போனையும் காணவில்லை என புகார் அளித்துள்ளார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி புனிதா உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X