search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே கடையில் புகுந்து வியாபாரி மீது தாக்குதல் - மனைவி உட்பட 5 பேர் மீது வழக்கு
    X

    புதுக்கடை அருகே கடையில் புகுந்து வியாபாரி மீது தாக்குதல் - மனைவி உட்பட 5 பேர் மீது வழக்கு

    • கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கணவரை பிரிந்து தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார்
    • போலீசார் விசாரணை நடத்தி புனிதா உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி தடிச்சமாவுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது 50). இவர் முஞ்சிறை பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புனிதா இவர்களுக்கு 2 பிள்ளைகளும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக புனிதா கணவரை பிரிந்து தற்போது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துதாஸ் கடையில் இருக்கும்போது, வேங்கோடு பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ராஜசேகர் உட்பட மேலும் மூன்று பேர் சேர்ந்து பேசி, தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கிறிஸ்துதாஸ் தனது செல்போனையும் காணவில்லை என புகார் அளித்துள்ளார். புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி புனிதா உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×