என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்
- என்ஜினீயர் பலி ; மற்றொருவர் படுகாயம்
- கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள ஏழுசாட்டுபத்து கிராமத்தை சேர்ந்தவர் பால்துரை. இவரது மகன் வருண் (வயது 27). இவர் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவரும் அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர் சித்தாந்த் (வயது 19) என்பவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மகாதானபுரம் ரவுண் டானா சந்திப்பில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை வருண் என்பவர் ஓட்டி சென்றார். சித்தாந்த் அவருக்கு பின்னால் அமர்ந்தி ருந்தார். இவர்கள் தங்களது ஊரான ஏழுசாட்டுபத்துக்கு செல்வதற்காக அகஸ்தீஸ்வ ரத்துக்கு செல்லும் சாலை யில் திரும்பும்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த கார் பயங்கரமாக மோதியது.
இதில் இவர்கள் இரு வரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த வருணை108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே வருண் பரிதாபமாக இறந்து விட்டார்.
இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வருணின் உடல் பிரேத பரிசோதனை ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்