search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கார் மின்கம்பத்தில் மோதி விபத்து
    X

    கார் மின்கம்பத்தில் மோதி விபத்து

    • டிரைவர் உயிர் தப்பினார்
    • களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரத்தை நோக்கி இன்று காலை கார் ஒன்று வந்துக்கொண்டிருந்தது.திருவனந்தபுரம் வினோத் காரை ஓட்டிவந்தார். களியக்காவிளை அருகே திருத்தோபுரம் பகுதியில் கார் வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.

    இதில் மின்கம்பம் இரண்டாக முறிந்தது. கார் அப்பளம் போல் நொறுங்கியது. இருப்பினும் ஓட்டுநர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார். அருகில் இருந்தவர் சிறு காயங்களுடன் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×