என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே மூதாட்டியை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
- மூதாட்டி தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- இரணியல் போலீசில் புகார்
கன்னியாகுமரி:
இரணியல் அருகே நெல்லியார்கோணம் தைபிலாவிளையை சேர்ந்தவர் சேவியர். இவரது மனைவி இருதயமேரி (வயது 77). இவருக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மூதாட்டி இருதயமேரி தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுசீலாமேரி, செல்வமேரி ஆகிய 2 பேரும் மூதாட்டி வீட்டுக்குச் சென்று அவரை அவதூறாக பேசி கையில் வைத்திருந்த தென்னை ஓலை மற்றும் மட்டையால் மூதாட்டியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் வலது கையில் ரத்தக் காயமடைந்த மூதாட்டி தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இருதயமேரி இரணியல் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 2 பெண்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்