search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை நீடிப்பு
    X

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியில் மழை நீடிப்பு

    • பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தின் அணை பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது.நேற்றும் பேச்சிபாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 20.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்தது. அணை பகுதிகளில் மழை பெய்து வருவதையடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    Next Story
    ×