search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நினைவு நாளை முன்னிட்டு கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
    X

    நினைவு நாளை முன்னிட்டு கருணாநிதி உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

    • தி.மு.க.செயலாளர் பாபு கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • பொன்.ஆசை தம்பி தலைமையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

    நாகர்கோவில் :

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலை மற்றும் உருவப்ப டத்திற்கு தி.மு.க.வினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    குமரி மாவட்டத்திலும் கட்சியினர் இன்று ஊர்வ லமாக சென்று கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தனர். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் கன்னியாகுமரி பேரூர் தி.மு.க.சார்பில் கன்னியாகுமரி பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் அண்ணா சிலைக்கு அருகில் வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில்அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சுந்தர்சிங், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிரேமலதா, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் அன்பழகன், சிறுபான்மையினர் உரிமை நலப்பிரிவு துணைச் செயலாளர் நிசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கொட்டாரம் சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு கொட்டாரம் பேரூர் தி.மு.க.செயலாளரும் கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலருமான வைகுண்ட பெருமாள் தலைமையில்தி.மு.க. வினர் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், பேரூர் வார்டு செயலாளர்கள் அய்யப்பன், குமரன், அரிகரசுதன், சுப்பிரமணியன், சந்திரசேகர், வள்ளி நாயகம், பன்னீர்செல்வம், அன்புதாஸ், சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அகஸ்தீஸ்வரம் ஜங்ஷனில் ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது .இதில் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி துணைத்தலைவர் மல்லிகா,கவுன்சிலர்கள் குமரேசன்,பிரேம்ஆனந்த், செல்வராஜ் ,மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, மற்றும் ஒன்றிய, பேரூர் ,கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    தென்தாமரைகுளம் ஜங்ஷனில் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ் தலைமை தாங்கினார்.திமுக வர்த்தகர் அணி இணைச்செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறி ஞர் தாமரைபாரதி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் பேராசிரியர் டி.சி.மகேஷ், ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜான் கிறிஸ்டோபர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பொன் ஜான்சன், வார்டு செயலாளர்கள் கே.கே.நாதன், ஆல்வின், அன்பு ரமேஷ், டென்னிஸ், நிர்வாகிகள் ஸ்டூவர்ட், எமர்சன், தாமரை பிரதாப், ஆல்பர்ட் பண்ணையார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குழித்துறை நகராட்சி சேர்மன் பொன்.ஆசை தம்பி தலைமையில் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில திமுக சட்டத்துறை இணை செயலாளர் தினேஷ், மாஹின் அபுபக்கர், கவுன்சிலர் அருள்ராஜ் மற்றும் நிர்வாகிகள் ஷாஜிலால், கலை, ஸ்டாலின் உட்பட கட்சி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

    Next Story
    ×