search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
    X

    நாகர்கோவிலில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

    • மரியநேசம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • வீட்டின் வெளியே சமையலறை கம்பியில் ஜோக்கியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மேல ராமன் புதூர் திருகுடும்ப கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோக்கியன் (வயது 73). இவர் தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். ஜோக்கியனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவர் உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று ஜோக்கியன் வீட்டில் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மனைவி மரியநேசம் அங்கு சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டின் வெளியே சமையலறை கம்பியில் ஜோக்கியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நேசமணிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய ஜோக்கியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மரியநேசம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    ஜோக்கியன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள். ஜோக்கியன் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி யில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

    Next Story
    ×