search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
    X

    நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்

    • விவசாய வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம்
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோதையாறு வடிநில கோட்டத்தில்46 நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங் களுக்கான மேலாண்மை குழுவின் தலைவர், உறுப்பி னர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதையொட்டி ஆட்சி மண்டல தொகுதி வாரியாக 18 வயது நிறைந்த அனைத்து நில உரிமையா ளர்களுமாகிய விவசாய வாக்காளர்களின் விவரம் படிவம் வி மற்றும் வி (ஏ) தமிழ்நாடு 2000-ம் ஆண்டு விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் விதிகள் 4 (2)-ன்படி வருவாய் துறை கிராம அலுவலகங்களில் விவசாயிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. படிவம் வி மற்றும் வி (ஏ)-ல் மறுத்தல், சேர்த்தல் மற்றும் நீக்கல் போன்ற திருத்தங்கள் இருப்பின் அவற்றை சரி செய்வதற்கு ஏதுவாக விவசாயிகளுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    இறுதி வாக்காளர் பட்டியல் படிவம் 9-ல் வெளியிட ஏதுவாக படிவம் வி மற்றும் வி (ஏ)-ல் திருத் தங்கள் செய்ய வேண்டி இருப்பின் விவசாயிகள் சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களையோ அல்லது வருவாய் துறை கிராம அலுவலர்களையோ அணுகி உரிய படிவத்தை பூர்த்தி செய்து வழங்கி சரி செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×