என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அருமனை சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்ததும் தடைபடும் மின்சாரம் - வியாபாரிகள், பெண்கள் கடும் அவதி
- லேசான மழை பெய்தாலும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டு விடுகிறது
- வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
மேற்கு மாவட்ட பகுதியான அருமனை சுற்றுவட்டார பகுதியிலும் பல இடங்களில் மழை பெய்கிறது. இங்கு மழை பெய்ய தொடங்கியதும் உடனே மின்சாரம் தடை படுகிறது.
லேசான மழை பெய்தாலும் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டு விடுகிறது. அதன்பின்பு மழை நின்ற பின்னரே மீண்டும் மின்சாரம் வருகிறது.
அருமனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இதுபோல பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. நேற்று முன்தினம் பல இடங்களில் இரவிலும் மின்சாரம் தடை பட்டது. இதனால் வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் பெரும் தவிப்புக்கு ஆளானார்கள்.
நேற்று காலையிலும் இதே நிலை நீடித்தது. மழை பெய்ய தொடங்கியதும் மின்சாரம் தடை பட்டதால் வியாபாரிகளும் பாதிப்புக்கு ஆளானார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் மின் தடைக்கான காரணத்தை கண்டுபிடித்து அதனை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்