என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
ஈத்தாமொழி எக்ஸ்க்ளூசிவில் தீபாவளியையொட்டி வீட்டு தோட்ட அழகு செடிகள் விற்பனைக்கு குவிந்துள்ளன
- விதவிதமான அழகு தாவரங்கள் 200-க்கும் மேற்பட்ட வகைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன.
- தீபாவளியையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வடசேரி கே.பி. ரோட்டில் தென்னை நார் கயிறு கூட்டமைப்பின் ஈத்தாமொழி எக்ஸ்க்ளூசிவ் என்ற ஷோரூமில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் அழகு தாவர செடிகள் மற்றும் தென்னை நார் தேங்காய் சிரட்டை ஆகிய வற்றில் உருவாக்கப்பட்ட தீபாவளி அன்பளிப்பு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் இயற்கை மெழுகு தீபங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் விதவிதமான அழகு தாவரங்கள் 200-க்கும் மேற்பட்ட வகைகள் இங்கு விற்பனைக்கு உள்ளன. தீபாவளி பண்டிகையை யொட்டி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்ட தொட்டிகளுடன் விதவிதமான வீட்டுக்குள் வளர்க்கப் படும் அழகு தாவர செடிகள் இங்கு விற்பனைக்கு குவிந்துள்ளன.
வீட்டிற்குள் வர வேற்பறை, முக்கிய அறை, படுக்கையறை, பூஜையறை, போர்டிகோ உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்க வசதியாக தொட்டிகளில் வளர்க்கப்படும் இந்த செடிகள் மனதிற்கு மகிழ்ச்சி யையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
இந்த செடிகள் வளர தென்னைமர தூள்கள் கொண்டும் இயற்கை உரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் கொண்டும் ரசாயன பொருட்கள் இல்லாமல் அமைக்கப்பட் டவை ஆகும். குறைந்த அளவு தண்ணீரில் இவை வளர்க்கப்படுகின்றன.
தமிழர்களின் கலாச்சா ரங்களை வெளிப்படுத்தும் விதமாக மண் தொட்டிகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இந்த வீட்டுக்குள் வளர்க்கப் படும் தோட்ட செடிகளை மேலும் அழகாக்கின்றன.
தீபாவளியையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதை பயன்படுத்தி கொள்ளும்படி அதன் உரிமையாளர் சிஜூ கேட்டுக்கொண்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்