search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியற்ற மனை பிரிவுகளை வரன்முறை செய்ய பிப்.29 வரை காலநீட்டிப்பு - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    X

    அனுமதியற்ற மனை பிரிவுகளை வரன்முறை செய்ய பிப்.29 வரை காலநீட்டிப்பு - கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

    • 04.09.2023 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அரசாணை எண்:118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அனுமதியற்ற மனைப் பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட் டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன் னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவு களை வரன்முறைப்படுத்த. ஏற்க னவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பி டப்பட்ட 2017 -ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லா மல் 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, 04.09.2023 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அரசாணை எண்:118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புப வர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படு கின்றது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் இந்த இறுதி வாய்ப்பினை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ் வாறு செய்திகுறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×