search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இரணியல் அருகே போலி நகை அடகு வைத்து மீண்டும் பணம் மோசடி
    X

    இரணியல் அருகே போலி நகை அடகு வைத்து மீண்டும் பணம் மோசடி

    • இரணியல் காவல் நிலையத்தில் புகார்
    • புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி செய்த பெண் குறித்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள தலக்குளம் அடுத்த புதுவிளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் ஜெனின் (வயது 38). இவர் திங்கள் நகர் ஆரோக்கியபுரத்தில் அடகு பிடிக்கும் கடை நடத்தி வருகிறார்.

    கடந்த மே மாதம் 3ம் தேதி இவர் கடையில் இருக்கும் பொழுது டிப்டாப்பாக வந்த பெண்மணி ஒருவர் 19.350 கிராம் கொண்ட ஒரு தங்க வளையலை அடகு வைத்து ரூ.68 ஆயிரம் பெற்றுச் சென்றுள்ளார். முகவரி சான்று எதுவும் கொடுக்காமல் சந்தியா கணவர் பெயர் விஜி செட்டிதெரு இரணியல் என முகவரியை மட்டும் வாய்மொழியாக கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி ஜெனின் கடையில் இல்லாத போது அவரது தம்பியிடம் சுமார் 21.5 கிராம் எடை கொண்ட 2 தங்க வளையல்களை கொடுத்து ரூ.75 ஆயிரம் கடன் பெற்றுள்ளார்‌ அப்போது அவருடைய பெயர் சைலஜா எனவும் கணவர் பெயர் சஜீவ், கோகுலம், இரணியல் மெயின்ரோடு என முகவரி கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் சமீபகாலமாக போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடந்து வருவது குறித்து பத்திரிகையிலும் சமூக வலைதளங்களிலும் தெரிந்து ஜெனின் டிப்டாப் பெண்மணி கொடுத்த நகைகளை சோதனை செய்துள்ளார். அப்பொழுது செம்பு கம்பிகளை தங்க முலாம் பூசி அந்த டிப்டாப் பெண்மணி மோசடி செய்திருப்பது தெரியவந்தது‌.

    மேலும் இரண்டு மோசடிகளிலும் ஈடுபட்டிருப்பது ஒரே பெண்தான் என்பதையும் சுமார் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் மோசடி செய்தது தெரிந்துகொண்ட ஜெனின் இதுகுறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி செய்த பெண் குறித்து விசாரணை நடத்தினார். அப்போது போலி முகவரி கொடுத்து ஏமாற்றிய டிப்டாப் பெண்மணி நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜா மனைவி அனுஷா (32) என தெரியவந்தது.

    இதையடுத்து தலைமறைவாகியுள்ள அனுஷாவை இரணியல் போலீசார் தேடி வருகின்றனர். இதில் ஜேசுராஜா கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் இது போன்ற மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×