என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
புதுக்கடை அருகே கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை
- ரூ.1½ கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் பலருக்கு பணம் கொடுக்க முடியவில்லை
- உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
கன்னியாகுமரி
புதுக்கடை அருகே உள்ள இனயம் புத்தன்துறை பகுதி பாரதி தெருவை சேர்ந்தவர் ஆண்டனி (வயது59), மீனவர்.
இவரது மனைவி உஷா, அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் சீட்டு பணம் முதலீடு செய்துள்ளனர். ஆனால் கடந்த சில மாதங்களாக சீட்டு தொழிலில் உஷாவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
சுமார் ரூ.1½ கோடி நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் பலருக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் கேட்டு பலரும் வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.
இதனால் உஷா தலைமறைவாகி வேறு வீட்டில் வசித்து வந்துள்ளார். இது போன்ற சம்பவங்களால் மனமுடைந்த அவரது கணவர் ஆண்டனி, வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.
இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆண்டனி உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்