search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் கார் மோதி மீனவர் படுகாயம்
    X

    குளச்சலில் கார் மோதி மீனவர் படுகாயம்

    • மீன்பிடி தொழில் செய்து வருகிறார்
    • களிமாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்

    கன்னியாகுமரி :


    குளச்சல் அருகே சிங்காரவேலர் காலனியை சேர்ந்தவர் எடிசன் (வயது 43). கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு எடிசன் பொருட்கள் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.குளச்சல் சோதனைச்சாவடி அருகே செல்லும்போது கடற்கரையிலிருந்து மெயின்ரோட்டிற்கு வந்த கார் எதிர்ப்பாராமல் எடிசன் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் கீழே விழுந்த எடிசன் படுகாயமடைந்தார்.அவரை அப்பகுதியினர் மீட்டு களிமாரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குளச்சல் போலீசார் எடிசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரின் பதிவு எண் மீது வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×