search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரி கடல் பகுதியில் வெளி மாநில மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும்
    X

    கன்னியாகுமரி கடல் பகுதியில் வெளி மாநில மீனவர்கள் மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும்

    • விசைப்படகு மீனவர்கள் சங்கம் வலியுறுத்தல்
    • போதிய மின்விளக்கு வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி சின்ன முட்டம் விசைப்படகு தொழிலாளர் மற்றும் உரிமையாளர்கள் முன்னேற்ற சங்க கூட்டம் தலைவர் ஜான் ஹென்றி தலைமையில் நடந்தது.

    சங்க துணை தலைவர் சகாய ஆன்றனி மில்டன், செயலாளர் பெபிலான், பொருளாளர் ஸ்டார்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி இன்பம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக நுழைவு வாயிலில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் கடலுக்குள் விசைப்படகுகள் சென்றுவர தடையாக இருக்கும் பொருளை அங்கு இருந்து அகற்றவேண்டும். சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக பழுதடைந்த நிலையில் கிடக்கும் அரசுக்கு சொந்தமான படகை அகற்ற வேண்டும். சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகள் அதிகமாக உள்ள தால் வலைகள் பழுது நீக்க ஏதுவாக துறைமுக வளா கத்தில் உள்ள இடத்தினை சமதளப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்ளப் பட்டது.

    சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக வளாகத்தில் போதிய மின்விளக்கு வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் பிற மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதிக்கு வந்து மீன்பிடிப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×