search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்
    X

    குமரி மாவட்டத்தில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்

    • அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அறிவுறுத்தப்பட் டது

    நாகர்கோவில், ஏப்.26-

    குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் மற்றும் ஒவ்வொரு துறையின் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரி களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஒவ்வொரு துறையின் வாயிலாக வளர்ச்சித் திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படை யில் குமரி மாவட்ட வருவாய்த்துறை, வழங்கல் துறை, சமூக நலத்துறை, கூட்டுறவுத் துறை, பள்ளிக்கல்வித்துறை, வேலை வாய்ப்புத் துறை, பொதுசுகாதாரத்துறை, மருத்துவத்துறை, விளையாட்டுத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந் தாய்வு மேற்கொள்ளப்பட் டது.

    குறிப்பாக வருவாய்த்து றையின் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உத வித்தொகை உள்ளிட்டவைகள் குறித்தும், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வித்திட்டம், எண்ணும் எழுத்தும் இயக்கம் குறித்தும், மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள், இலவச பஸ் பயண அட்டை மற்றும் பள்ளிகளின் உள்கட்ட மைப்பு உள்ளிட்ட பணிகள் குறித்தும் வறுமைக் கோட்டிற்கு கீழ் எத்தனை பயனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்கப்பட் டுள்ளது உள்ளிட்டவைகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது.

    மத்திய அரசால் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி அறிவுறுத்தப்பட் டது. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அனைத் துத்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

    கூட்டத்தில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், நாகர்கோ வில் வருவாய் கோட் டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) சுப்பையா, மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட சமூக நல அதிகாரி சரோஜினி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரி ஜெயந்தி, கூட்டு றவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சந்திரசே கர், இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) பிரக லாதன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவகல்லூரி மருத்துவமனை சூப்பிரண்டு அருள்பிரகாஷ் உட்பட துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மாலையில் மாநகராட்சி. நகராட்சிகள், பேரூ ராட்சிகள், ஊராட்சிகள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, மீன்வளத்துறை, சுற்று லாத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை, தோட் டக்கலைத்துறை, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழ கம். ஆவின், மாவட்ட தொழில்மையம் உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மேற் கொண்டார்

    Next Story
    ×