search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காட்டில் மயங்கி விழுந்தவர் சாவு
    X

    மண்டைக்காட்டில் மயங்கி விழுந்தவர் சாவு

    • யாராவது சாப்பிட வாங்கி கொடுத்தால் சாப்பிடுவார்.
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு ஏ.வி.எம். கால்வாய் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சுற்றித்திரிந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. யாராவது சாப்பிட வாங்கி கொடுத்தால் சாப்பிடுவார்.

    இந்நிலையில் கடந்த 21-ந்தேதி அவர் ஏ.வி.எம். கால்வாய் பகுதியில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மண்டைக்காடு கிராம நிர்வாக அலுவலர் திவ்யா மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை உறவினர்கள் அடையாளம் காண ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

    Next Story
    ×