search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தலைமை ஆசிரியை காயம்
    X

    புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தலைமை ஆசிரியை காயம்

    • கல்வி இயக்க அலுவலகத்தில் மாணவர்களுக்கான புத்தகங்கள் வாங்க சென்றுள்ளார்.
    • மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே உள்ள உதச்சிக்கோட்டையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குதித்துறை பகுதி பாலவிளையை சேர்ந்த பிரேம ராஜகுமாரி (வயது 58). தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் முஞ்சிறையில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் மாணவர்களுக்கான புத்தகங்கள் வாங்க சென்றுள்ளார். புத்தகங்களை வாங்கி விட்டு, அலுவலக வெளியில் சாலையில் வரும்போது, எதிரில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து, மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுதொடர்பான புகாரின்பேரில் விபத்தை ஏற்படுத்திய எஸ்.டி. மாங்காடு பகுதியை சேர்ந்த அகின் (22) என்பவர் மீது புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×