search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் வீசிய சூறைக்காற்று
    X

    கன்னியாகுமரியில் வீசிய சூறைக்காற்று

    • கடலுக்கு சென்ற மீனவர்கள் அவசரமாக கரைக்கு திரும்பினர்
    • மீன் சந்தைகள் மீன் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பி டிக்கச் சென்றனர்.

    நடுக்கடலில் அவர்கள் வலையை விரித்து மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மதியம் சுமார் 2மணி அளவில் ஏற்பட்ட சூறாவளி காற்றினால் கடல் கொந்தளிப்புடன் காணப்ப ட்டதாக மீனவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.

    இதேபோல் ஆரோக்கிய புரம், கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்து றை, கோவளம் கீழம ணக்குடி மணக்குடி பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் வள்ளங்கள் கரையோரம் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இதனால் மீன் சந்தைகள் மீன் வரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மீன் விலை யும் கடுமையாக உயர்ந்தது.

    கடல்சீற்றம் காரணமாக விவேகானந்தர் பாறைக்கு 3 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது.

    Next Story
    ×