என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.65 சதவீதம் பேர் தேர்ச்சி
- குமரி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 875 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள்.
- மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மெட்ரிக் பள்ளிகளில் படித்த 10 ஆயிரத்து 959 மாணவர்களும் 11 ஆயிரத்து 916 மாணவ மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 875 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்கள். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
இதில் 10 ஆயிரத்து 148 மாணவர்களும் 11 ஆயிரத்து 731 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 879 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 92.60 சதவீதம் பேரும் மாணவிகள் 98.45 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சராசரியாக 95.65சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் பிளஸ்-2 தேர்வில் குமரி மாவட்டம் 13வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்வின் போது 95.06 பிடித்து 9வது இடத்தை பிடித்து இருந்த நிலையில் தற்போது 13-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
தேர்ச்சி விழுக்காடு அதிகரித்த நிலையிலும் மாவட்ட அளவில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்