search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சர்வதேச கடற்கரை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மை பணி
    X

    சர்வதேச கடற்கரை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் தூய்மை பணி

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் என். எஸ். எ.ஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை யொட்டி கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ், தமிழ்நாடு கடற்கரை தூய்மை இயக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கன்னியா குமரி கடற்கரையில் மெகா தூய்மை பணி நடந்தது.

    இந்த தூய்மைப்பணி தொடக்க விழா கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் நடந்தது. குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கடற்கரை தூய்மை பணி முகாமை கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்.

    கன்னியாகுமரி போலீஸ் டி. எஸ். பி. ராஜா, சுற்றுச்சூழல் கோட்ட பொறுப்பாளர் கண்ணன், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன் சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஸ், அகஸ்தீஸ்வரம் விவே கானந்தா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராம்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் முத்துசாமி நன்றி கூறினார்.

    அதன்பிறகு கன்னியா குமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. இதில் பள்ளி, கல்லூரிமாணவ- மாணவிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் என். எஸ். எ.ஸ் மற்றும் என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பை கூழங்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×