search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானையை பயன்படுத்த வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை
    X

    பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவுக்கு யானையை பயன்படுத்த வேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

    • காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.
    • நவராத்திரி திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில்ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா, வைகாசி மாதம் விசாக திருவிழா நடைபெற்று வரு கின்றன.

    இந்த விழா காலங்களில் 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேக புனித நீர், விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து நெற்றிப் பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த வைகாசி விசாக திருவிழாவின் போது யானை பயன்படுத்தப்பட வில்லை. இதுபற்றி கோவில் நிர்வாகத்திடம் கேட்ட போது யானை பயன்படுத்துவதற்கு வனத்துறை அனுமதி பெற வேண்டும் என்றும் அதில் சில கட்டுப்பாடுகள் இருப்ப தாகவும் தெரிவித்தனர்.

    வைகாசி விசாக விழா வின் 10 -ம் நாள் நடந்த தேரோட்டத்தின் போது தேர் தடி எடுத்து போடு வதற்கு கூட யானை பயன்படுத்தப்படவில்லை. இது பக்தர்களுக்கு மன வேத னைைய ஏற்படுத்தியது. இந்த நிலையில் நவராத்திரி திருவிழா வருகிற 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இந்த விழாவின் போது பாரம்பரிய முறைப்படி 10 நாட்களும் அம்மனுக்கு அபிஷேகத்துக்குரிய புனித நீரை எடுத்துவருவதற்கு யானையை பயன்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்காக வனத்துறையின் அனும தியை பெற இந்து அற நிலையத்துறையினர் தற்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×