search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் காந்தி-காமராஜர் மண்டபங்களில் மாலை அணிவித்து மரியாதை
    X

    கன்னியாகுமரியில் காந்தி-காமராஜர் மண்டபங்களில் மாலை அணிவித்து மரியாதை

    • அனைத்து கட்சி தலைவர்கள் மாலை அனைவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
    • காமராஜரின் 48-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

    கன்னியாகுமரி :

    மகாத்மா காந்தியடி களின் 155-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதேபோல மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 48-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில்உள்ள காந்தி அஸ்தி கட்டம் (நினைவிடம்) மற்றும் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மாலை அனைவித்தும் மலர்தூவியும்மரியாதை செலுத்தினார்கள்.

    அரசு சார்பில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர்ஸ்ரீதர், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான்ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம்தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், வைகுண்ட பெருமாள், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதாரம் மேற்பார்வையாளர் பிரதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய்வசந்த்எம்.பி. தலைமையில் அகஸ்தீஸ்வரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், தெற்கு வட்டார தலைவர் சாம்சுரேஷ்குமார் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×