search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்
    X

    நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணசுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

    • தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள், விசேஷ அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றன
    • காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில், கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள், விசேஷ அலங்காரத்தில் சுவாமி வீதி உலா

    நடைபெற்றன. சமய சொற்பொழிவுகள், இன்னிசை விருதுகள், பக்தர்களுக்கு அன்னதானம், சிறப்பு பட்டிமன்றம் போன்றவையும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 8-ம் திருவிழா நடைபெற்றது. காலை 6 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. மாலையில் நாதசுவரம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நாளை (4-ந் தேதி) 9-ம் நாள் திருவிழாவில் காலை 8 மணிக்கு தேரோட்ட வைபவம் நடக்கிறது. அமைச்சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். கலெக்டர் ஸ்ரீதர், போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி. ,எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ, மாநகராட்சி கமிஷனர் ஆனந்த் மோகன், ஆகியோரும் விழாவில் பங்கேற்கிறார்கள்.

    அதன் பிறகு காலை 11 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.மாலை 6 மணிக்கு நாதஸ்வரம் நிகழ்ச்சியும் இரவு 8:30 மணிக்கு இன்னிசை விருந்து நிகழ்ச்சியும், 9மணிக்கு சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 10 ம்-நாள் திருவிழா நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், சிறப்பு பஞ்சாரி மேளம் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதன் பிறகு மாலை 5 மணிக்கு அலங்கார குதிரை பவனி நிகழ்ச்சி, விளக்கு ஆட்டம், அன்ன ஆட்டம் ஆகியவை நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு ஆராட்டு பூஜை, அதனைத் தொடர்ந்து நாதஸ்வரம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு லஷ்மன் சுருதி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 9 மணிக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு சுவாமி தெப்பத்தில் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளது.

    Next Story
    ×