என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புத்தளம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்3 July 2023 8:49 AM GMT
- மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கினார்.
- சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜன் வில்பிரிட் மோகன் பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி :
புத்தளம் அருகே உள்ள மணவாளபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் வில்பிரிட் மோகன் (வயது 62). இவருக்கு மது பழக்கம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று ராஜன் வில்பிரிட் மோகன், தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர், விஷம் குடித்து வீட்டில் மயங்கினார்.
வாயில் நுரை தள்ளியபடி கிடந்த ராஜன் வில்பிரிட் மோகனை, மனைவி உஷாகுமாரி மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை ராஜன் வில்பிரிட் மோகன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி புகாரின் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X