search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொது இடங்களில் அலங்கார வளைவுகள் வைத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
    X

    பொது இடங்களில் அலங்கார வளைவுகள் வைத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

    • தமிழக அரசு உத் தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மட் அணிவது கட்டாயமாகும்
    • காவல்துறை மூலம் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் இரவு நேரங்களில் அனுமதிக்கப்படாது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக் டர் அரவிந்த் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலையில் சாலை பாதுகாப்பு விழிப் புணர்வு குறித்து துறை அலு வலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் குமரி மாவட்ட வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.

    தமிழக அரசு உத் தரவின்படி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் ஹெல்மட் அணிவது கட்டாயமாகும். எனவே, அரசுபணியாளர் கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் போது ஹெல்மட் அணி யாமலும், மூன்று நபர்கள் பயணிக்கும் பணியாளர் களுக்கும், பொதுமக்களுக் கும் அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதிவேகம் மற்றும் குடிபோதையில் வாகனம் இயக்குவதால் பெரும் பாலான சாலை விபத் துகள் ஏற்படுவதாகவும், விதிமீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற் கொள்ள போக்குவரத்து மற்றும் காவல்துறை அலு வலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. ஹெல்மட் அணிவதன் மூலம் தனது உயிருக்கு மட்டுமல்லாது தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பான சூழ்நி லையை உருவாக்குவதில் பொதுமக்களுக்கு முன்மா திரியாக நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    கடந்த மாதம் மாவட் டத்தில் நடைபெற்ற விபத் துகள் அதற்கான காரணம், அதனை சரிசெய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித் தும் வட்டார போக்குவ ரத்து அலுவலர் மற்றும் அனைத்துத்துறை அலுவ லர்களிடையே விவாதிக் கப்பட்டதோடு, சாலை விபத்து அதிகமாக ஏற்படும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் அமைக்கவும், பொது இடங்களில் அலங்கார வளைவுகள் வைத்தால் காவல்துறை மூலம் சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வும் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்கள் இரவு நேரங்களில் அனுமதிக்கப்ப டாது எனவும், ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகை வைக்கவும் வேகத் தடை மற்றும் சாலையின் நடுப்பகுதியில் வெள்ளைக் கோடு ஏற்படுத்தவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப் பிரியா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் டாக்டர் அலர் மேல் மங்கை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (பொது) வீராசாமி. நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம் உசூர் மேலாளர் (குற்றவியல்) சுப் பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×