search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்ஸ்டாகிராம் மூலம் காதல்
    X

    இன்ஸ்டாகிராம் மூலம் காதல்

    • பிளஸ்-1 மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது
    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் சேலம் மாவட்டம் நாட்டுக் கோட்டையைச் சேர்ந்த தினேஷ் (வயது 21)எலக்ட்ரீசியன் என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தினேஷ் மாணவியை சந்திப்பதற்காக கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரிக்கு வந்த தினேஷ் மாணவியை கன்னியாகுமரிக்கு வருமாறு அழைத்தார்.இதையடுத்து மாணவி பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு கன்னியாகுமரிக்கு சென்றார்.

    அங்குள்ள லாட்ஜில் மாணவியுடன் தினேஷ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தினேஷ் இங்கிருந்து ஊருக்கு சென்று விட்டார். அதன் பிறகு மாணவியுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார்.

    இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் செய்தனர். நாகர்கோவில் மகளிர் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்‌.தினேஷை பொறிவைத்து பிடிக்க முடிவு செய்தனர்.இதையடுத்து மாணவியை தினேஷுடன் பேசி கன்னியாகுமரிக்கு வரவ ழைத்தனர். தினேஷ் கன்னி யாகுமரிக்கு வந்தார்.

    அப்போது போலீசார் தினேஷை பிடித்தனர்.பிடிபட்ட தினேஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர் படுத் தப்பட்டு ஜெயி லில் அடைக் கப்பட்டார். மாணவி மருத்துவ பரிசோத னைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்.

    Next Story
    ×