search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஈத்தாமொழி எக்ஸ்க்ளுசிவ்வில் தீபாவளிக்கு இயற்கை தீபங்களுடன் அலங்கார தாவரங்களை பரிசுகள் ஆக்குங்கள்
    X

    ஈத்தாமொழி எக்ஸ்க்ளுசிவ்வில் தீபாவளிக்கு இயற்கை தீபங்களுடன் அலங்கார தாவரங்களை பரிசுகள் ஆக்குங்கள்

    • உங்கள் வீடுகளில் பசுமையையும் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்கும்
    • இயற்கையான சோயா மெழுகு மெழுகுவர்த்திகளால் ஒளிரச் செய்யுங்கள்

    நாகர்கோவில் :

    தீபங்களின் திருநாளான தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் தருவாயில், நாட்கள் நெருங்க நெருங்க, இந்த வருடம் புதியதாக என்ன செய்யலாம் என்று மனதிலே உற்சா கத்துடனும், ஆர்ப்பரிப்புடனும் ஆரவாரத்துடனும் தயாராகிக் கொண்டிருக்கின்றோம். சுற்றுச்சூழலுக்கு உகந்ததான பொருட்களும் வாழ்க்கை முறைகளும் பிரபலமாகி கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் தீபாவளிக்கு இந்த புதிய நாகரிகத்தில் புதிய வகை பரிசளிப்புகள் பிரபலமாகி வருகின்றன.

    உங்கள் வீடுகளில் பசுமையையும் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் வரவேற்கும் தனித்துவம் செழிப்பான அலங்கார செடிகளால் கூடும். இளையோரும் முதியோரும் பிரபலங்களும் யாராக இருந்தாலும் மிகவும் விருப்பப்படும் அழகு செடிகள் எல்லோருக்கும் சந்தோஷம் தருபவையாக இருக்கும்.

    அதிகப்படியான நேரத்தை நாம் வீட்டினுள் செலவழிக்கும் பொழுது பச்சை நிறம் மற்றும் செடிகளின் பசுமை நமக்கு புத்துணர்ச்சி ஊட்டுப வையாக இருக்கின்றன. வீடுகளிலும் போதிய இடங்கள் இல்லாத நிலையில் எல்லோராலும் வீட்டுத் தோட்டமும் மாடித்தோட்டமும் அமைப்பது சாத்தியமான காரியங்கள் இல்லை. எளிய முறையில் நமது வீடுகளில் பசுமையான சூழலை உருவாக்கவும் அதன் மூலம் வரும் மன அமைதியும் சந்தோஷத்தை யும் அனுபவிக்கவும் வீட்டினுள் வளர்க்கும் செடிகள் மிகவும் பயனுள்ளவையாக அமைகின்றன. இவைகள் மன அழுத்தத்தை குறைப்பதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன

    புதியதாக அழகு தாவரங்கள் வளர்த்த ஆர்வம் உள்ளவர்கள் அவைகளை கவனிக்கும் முறைகள் அறியாது மலைப்புடன் அழகு செடிகளை பார்த்துவிட்டு கடந்து செல்வது தான் வழக்கம். இந்த ஒரு நிலைமையை மாற்றி வீட்டினுள் அழகு செடிகள் வைப்பதை மிகவும் இலகுவாக மாற்றி அமைத்துள்ளன ஈத்தாமொழி எக்ஸ்க்ளுசிவ் வழங்கும் தென்னை நார் சார்ந்த பொருட்கள். இங்கு விற்பனை செய்யப்படும் அனைத்து அழகு செடிகளும் தென்னைநார்சார் பொருட்களைக் கொண்டு முழுமையாக நிறுவி அமைக்கப்பட்டவை. எனவே இந்த செடிகளை அனுபவம் இல்லாதவர்கள் கூட மிகவும் எளிதில் கவனித்து பேணி பாதுகாக்க முடியும்

    தீபங்களின் திருநாளை இயற்கையான தீபங்களுடன் கொண்டா டுவதற்கு ஏதுவாக தேங்காய் ஓடுகளி லிருந்து கைவினைப்பொருளாக உருவாக்கப்பட்ட இயற்கை யான சோயா மெழுகு மெழுகுவர்த்தி களின் அழகிய சேகரிப்பு டன் பலவகை நறுமணங்க ளுடன் வீடுகளை ஒளிரச் செய்ய உங்கள் நண்பர்களுக்கு உங்கள் அன்பை பகிர இவைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த மெழுகுவர்த்திகள் பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உணர்வுகளை வசீகரிக்கும் இனிமையான வாசனை களையும் வெளிப்படுத்து கின்றன.

    இந்த தீபாவளி இனிதானதா கவும், உங்கள் வீடுகளிலும், உங்கள் நண்பர்கள் மத்தியிலும், சந்தோஷத்தையும், அமைதியையும் நல்ல உடல் நலனையும் கொண்டு வருபவையாக நிலை நிறுத்துவதாக அமைய வாழ்த்துகிறோம். உங்கள் அனைவருக்கும் நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஈத்தாமொழி எக்ஸ்க்ளூசிவ்வின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    Next Story
    ×