என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டத்தில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது
- வீட்டு வேலை செய்து வந்தவர் வீட்டில் திருட முயற்சி
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி:
மணவாளக்குறிச்சி ஆற்றன்கரை காலனியை சேர்ந்தவர் பிந்து (வயது 41). இவர் திருவனந்தபுரத்தில் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.
தற்போது இவர் மார்த்தாண்டத்தை அடுத்த நல்லூர் பல்லன்விளையில் தனது மகனுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அதிகாலை 4 மணிக்கு பிந்து, திருவனந்தபுரம் செல்வதற்காக வீட்டில் சமையல் வேலையில் ஈடு பட்டார்.
அப்போது வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் புகுந்து உள்ளார். அவர் வீட்டில் இருந்த செல்போனை திருடி உள்ளார். இதை கவனித்து விட்ட பிந்துவும் அவரது மகனும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் இருவரும் அந்த வாலிபரை பிடித்து மார்த்தாண்டம் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்த ஷேக் மைதீன் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்