search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறவன்குடியிருப்பில் பொன் ஜெஸ்லி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்
    X

    மறவன்குடியிருப்பில் பொன் ஜெஸ்லி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம்

    • மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
    • ஆக்சிஜன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மறவன் குடியிருப்பு புனித மரி யன்னை தொடக்கப்பள்ளியில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சார்பில் மருத்துவ முகாம் இன்று நடந்தது.

    முகாமை மறவன்குடி யிருப்பு ஊர் தலைவர் ஆண்டனி எட்வின் தொடங்கி வைத்தார். பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர்கள் பாபி, சிவனேசன், சமீன், மதன் ஆகியோர் சிகிச்சை அளித்தனர். பொது மருத்துவம், ரத்த பரிசோதனை, ஆக்சிஜன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் பங்கு தந்தை ஜோசப் அருள் ஸ்டாலின், ஸ்டீபன் அமலதாஸ், ஆரோக்கிய வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×