search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலையில் கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை
    X

    தக்கலையில் கருணாநிதி உருவப்படத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மரியாதை

    • முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மரியாதை
    • கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தக்கலையில் கருணாநிதியின் உருவ படத்திற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் நகர செயலாளர் சுபிகான், மாவட்ட பொருளாளர் மரிய சிசுகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயு பிரேம்குமார், நகர அவைத் தலைவர் அருள் சோபன், பொறியாளர் அணி வீர வர்கீஸ், ஆல்வின் வினோ, ஜமீல் குமார், ஸ்ரீ குமார், பிளசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×