search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம், செல்போன் திருட்டு
    X

    நாகர்கோவில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம், செல்போன் திருட்டு

    • மணிபர்சில் ஒரு செல்போனும், ரூ.2,300 ரொக்கமும் இருந்தது
    • திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் இதுதொடர்பாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பஸ் நிலையத்தில் எப்போதும் கூட்டம் அதிகமாக இரு க்கும். இந்த கூட்டத்தை பயன்படுத்தி நகை, பணம், செல்போன் உள்ளிட்ட திருட்டு சம்பவங்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அண்ணா பஸ் நிலை யத்தில் நேற்று மதியமும் கூட்டம் அதிமாக இரு ந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இந்திரா ராணி (வயது 46) என்பவர் வௌ்ளிச்சந்தைக்கு வந்தார். வடசேரியில் இருந்து மினி பஸ்சில் அண்ணா பஸ் நிலையத்துக்கு வந்து இறங்கினார்.

    அப்போது பார்த்தபோது இந்திரா ராணியின் மணிபர்சை காணவில்லை. அந்த மணிபர்சில் ஒரு செல்போனும், ரூ.2,300 ரொக்கமும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் நிலையத்திலும், அவர் வந்த மினி பஸ்சிலும் தேடினார். ஆனால் கிடைக்க வில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் இந்திரா ராணி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையத்தில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் இதுதொடர்பாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×