search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து
    X

    இரணியல் அருகே மோட்டார் சைக்கிள் விபத்து

    • வேன் மோதியதால் விபத்து
    • என்ஜினீயர் உள்பட 2 பேர் பலி

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு குன்னங் காடு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் ரமேஷ் (வயது 28). இன்ஜினியரிங் பட்ட தாரியான இவர் கேனில் குடிநீர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவருடன் அழகன்பாறை அருள்சுந்தர்ராஜ் மகன் சுபாஷ் (32) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று இரவு வேலை முடிந்து ஒரே மோட்டார் சைக்கிளில் நாகர்கோவிலில் இருந்து திங்கள்நகர் நோக்கி வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிைள ரமேஷ் ஓட்டினார்.

    மோட்டார் சைக்கிள் இரணியல் மேலத்தெரு ஜங்ஷன் அருகே வந்த போது எதிர்பாராத வித மாக எதிரில் வந்த மினி வேன் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயமடைந்த இருவ ரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சுபாஷை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கும், ரமேஷை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சுபாஷ் நேற்று இரவும், ரமேஷ் இன்று அதிகாலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதா பமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து மினிவேன் டிரைவர் ஆலஞ்சி ராபின்ரோஸ் (35) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இரண்டு வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இரணியல் மேலத்தெரு பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் அடிக்கடி உயிரிழப்பு நடப்பதால் போர்க்கால அடிப்படையில் சாலையை விரிவுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×