search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்டைக்காடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்
    X

    மண்டைக்காடு அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் படுகாயம்

    • மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதிவிட்டு நிற்காமல் 50 மீட்டர் தூரத்தில் மின் கம்பத்தில் மோதி நின்றது.
    • குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு அருகே பருத்திவிளையை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் அனீஷ் (வயது 36).கொத்தனார்.அனீஷ் பருத்திவிளையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று இரவு வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது அவர் அங்கு ஒரு சர்ச் முன்பு செல்லும்போது எதிரே மண்டைக்காடு - லட்சுமிபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த ஜாக்சன் டைமன் கிட்டு (16) மற்றும் கோடிமுனையை சேர்ந்த ஜாஸ்பன் (17) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக அனீஷ் மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதிவிட்டு நிற்காமல் 50 மீட்டர் தூரத்தில் மின் கம்பத்தில் மோதி நின்றது.

    இதில் மின் கம்பம் உடைந்து சாய்ந்தது. இந்த சம்பவத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.அப்பகுதியினர் 3 பேரையும் மீட்டு உடையார்விளையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சை க்காக அனீஷ் மற்றும் ஜாக்சன் டைமன் கிட்டு ஆகிய இருவரும் நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×