search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றினால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X

    குமரி மாவட்டத்தில் வீசிய சூறைக்காற்றினால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • காற்றின் வேகத்தின் காரணமாக மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது
    • சுசீந்திரம் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்த நிலையில் மாவ ட்டம் முழுவதும் இன்று காலையில் சூறைக்காற்று வீசியது. நாகர்கோவில் புத்தேரி பகுதியில் வீசிய சூறைக்காற்றினால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். புத்தேரி குளத்தின்கரை பகுதியில் செல்லும் சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல முடியாமல் அவதிபட்டனர்.

    இதையடுத்து சில வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர். பலரும் தங்களது இருசக்கர வாகனங்களை இயக்க முடியாமல் சாலையின் ஓரத்தில் நிறுத்தினர். காற்றின் வேகம் குறைந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

    புத்தேரி குளத்தின்கரை பகுதியில் பழமை வாய்ந்த மரங்கள் உள்ளது. காற்றின் வேகத்தின் காரணமாக மரங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தை ஏற்படுத்துவதற்கு முன்னதாக அந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து ள்ளனர்.

    இதேபோல் சுசீந்திரம் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகமாக காணப்பட்டது. சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் பறந்தன. சூறைக்காற்றின் காரணமாக மணல்களும் காற்றில் புழுதியாக பறந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மரக்கிளைகள் பல்வேறு இடங்களில் முறிந்து விழுந்தது.

    அகஸ்தீஸ்வரம் ராஜாக்க மங்கலம் ஒன்றியத்து க்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமப்பு றங்களிலும் இன்று காலை யில் சூறைக்காற்று வீசியது. கன்னியாகுமரி பகுதியில் வீசிய சூறைக்காற்றின் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். இதேபோல் மேற்கு மாவட்ட பகுதிகளிலும் இன்று காலையில் சூறைக்காற்று வீசியது.

    Next Story
    ×