search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சலில் விசைப்படகில் சிக்கிய நாக்கண்டம் மீன்கள்
    X

    குளச்சலில் விசைப்படகில் சிக்கிய நாக்கண்டம் மீன்கள்

    • விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் அதிகமாக கிடைத்தன.
    • மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு பெட்டி கிளி மீன்கள் ரூ.3500 விலை போனது. இது முந்தைய விலையை விட ரூ.1500 குறைவு

    கன்னியாகுமரி :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும்,

    1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வரு கிறது.

    குளச்சல் கடல் பகுதி யில் ஆகஸ்டு மாதத்தின் தொடக்கத்தில் பலத்த காற்று வீசியதால் மீன் பிடித்தொழில் பாதிக்கப் பட்டது. கடந்த 2 வாரமாக மழை, காற்று ஓய்ந்த நிலை யில் விசைப்படகுகள் மற்றும் பைபர் வள்ளங்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன.

    ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற விசைப்பட குகளில் 58 படகுகள் நேற்று கரை திரும்பின. இவற்றுள் நாள் ஒன்றுக்கு 20 டோக்கன்கள் முறையில் விசைப்படகுகளில் இருந்த மீன்கள் இறக்கப்பட்டன. அவற்றுள் கிளி மீன்கள், நாக்கண்டம் மற்றும் கணவாய் மீன்கள் அதிகமாக கிடைத்தன.

    மீனவர்கள் அவற்றை மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து விற்பனை செய்தனர். ஒரு பெட்டி கிளி மீன்கள் ரூ.3500 விலை போனது. இது முந்தைய விலையை விட ரூ.1500 குறைவு. இது போல் தலா கிலோ ரூ.38-க்கு விலை போன நாக்கண்டம் மீன் நேற்று தலா கிலோ

    ரூ.32-க்கு விலை போனது. ரூ.400-க்கு விற்ற தோட்டு கணவாய் ரூ.320 விலையும், ரூ.320 க்கு விற்ற ஓலக்கணவாய் ரூ.240-க்கு விலை போனது.

    கிளி மீன்கள் பற்பசை தயாரிப்பதற்கும், நாக்கண் டம் மீன்கள் கோழி தீவனம் தயாரிப்பதற்கும் வியா பாரிகள் போட்டிப்போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். மீன்கள் அதிகம் கிடைத்தும் குறை வான விலை போன தால் மீனவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

    Next Story
    ×