என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரத்தில் பெயின்டர் தூக்கு போட்டு தற்கொலை
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே கல்வெட்டான்குழி, கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 32) இவருக்கு அபிநயா என்ற மனைவியும் 6 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர் பெயின்டிங் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இவர் அந்த பகுதியில் உள்ள சுய உதவி குழுக்களில் கடன் வாங்கியிருந்தார். சரிவர வேலை இல்லாததால் குழுவில் பணம் கட்ட முடியவில்லை இதனால் மன விரக்தியில் இருந்தார். நேற்று மனைவியையும் பிள்ளைகளையும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு வீட்டின் பின்பக்க வாசல் மூலம் வீட்டில் வந்து உத்திரத்தில் கயிற்றில் தூக்கில் தொங்கி இருந்தார்.
இரவு மனைவியும் பிள்ளைகளும் வந்து கதவை திறந்து பார்க்கும் போது ராஜேஸ் இறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே குலசேகரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இன்ஸ்பெக்டர் பாலமுருகன் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்