search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறை நாளில் குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்
    X

    விடுமுறை நாளில் குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

    • குடும்பம் குடும்பமாக மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை போக்கினர்.
    • தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    குளச்சல் சுற்று வட்டார பொதுமக்கள் மாலை வேளையில் குளச்சல் கடற்கரை வந்து பொழுதை கழித்து செல்வர். மாலை வேளையில் மணற்பரப்பில் அமர்ந்து சூரியன் மறையும் காட்சியை கண்டுகளித்து மாலை நேர கடற்கரை காற்று வாங்கி செல்வது வழக்கம்.

    நேற்று மாலை குளச்சல் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பொது மக்கள் குளச்சல் கடற்கரை யில் குவிந்தனர். ஞாயிற்றுக் கிழமை விடுமுறை நாள் என்பதால் பெண்கள், சிறு வர்கள், பெரியவர்களின் கூட்டம் கடற்கரையில் நிரம்பி வழிந்தது. அவர்கள் நண்பர்கள், குடும்பம் குடும்பமாக மணற்பரப்பில் அமர்ந்து பொழுதை போக்கினர்.

    சிறுவர்கள் மணற்பரப் பில் விளையாடி மகிழ்ந்த னர். அருகில் குளச்சல் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பூங்காவிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குளச்சல் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்ததால் குளச்சல் கடற்கரை மிகுந்த களைக்கட்டி காணப்பட்டது. இதனால் தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் ஐஸ் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.விடுமுறை நாளில் குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    Next Story
    ×